நீங்க வேணுனா பாருங்க அவருதான் இந்திய அணிக்கு உலககோப்பையை ஜெயிச்சி தருவாரு – யுவ்ராஜ் சிங் நம்பிக்கை

Yuvi
- Advertisement -

இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியிடம் இழந்தது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற உள்ள வேளையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று இந்திய அணியின் வீரர்களின் செயல்பாடும் அனைவரும் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

குறிப்பாக இந்த தொடரின் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் தொடர்ச்சியாக தான் விளையாடிய 3 போட்டியிலும் முதல் பந்தியிலேயே கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தார்.

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக பார்க்கப்படும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படி மோசமாக விளையாடி வருவது அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அவரை அணியில் இருந்து வெளியேற்றி விட்டு சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் குரல் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சூரியகுமார் யாதவுக்கு எதிராக ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் சூரியகுமார் யாதவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து நம்பிக்கை அளித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் :

- Advertisement -

எல்லா விளையாட்டுத் துறைகளிலுமே வீரர்களுக்கு ஏற்றம் இருக்கும் என்பது இயல்புதான். அந்த வகையில் நாம் அனைவருமே அந்த தருணத்தை கடந்து தான் வந்திருப்போம். நிச்சயம் நான் உறுதியாக நம்புகிறேன் சூரியகுமார் யாதவ் தான் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கீ பிளேயராக இருப்பார்.

இதையும் படிங்க : எனக்கு இன்னும் கொஞ்சம் மாதம் டைம் ஆகும். ஐ.பி.எல் துவங்கும் முன்னரே முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – மேக்ஸ்வெல்

அவருக்கான வாய்ப்புகளை கொடுத்தால் நிச்சயம் அவர் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தருவார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement