திடீரென தனது 39 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டு எளிமையாக விடைபெற்றார் தோனி. ஆனால் தோனி இவ்வளவு எளிமையாக சென்றிருக்க கூடாது எனவும் இவருக்கு மிகப்பெரிய ஒரு இறுதிப் போட்டியை நடத்தி மரியாதை செலுத்தி அனுப்ப வேண்டும் எனவும் பல வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நம்பர் 7யை நிரந்தரமாக ஓய்வு கொடுத்து உட்கார வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தோனியுடன் தாங்கள் பகிர்ந்து கொண்ட இனிமையான நினைவுகள் பற்றி தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ,கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷிகர் தவான், ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ் என பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
Congratulations @msdhoni on a great career! Enjoyed lifting the 2007 and 2011 WC trophies together for our country and our many partnerships on the field. My best wishes to you for the future 👍 pic.twitter.com/2g3tgTsLfn
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 16, 2020
அந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தோனி உடனான முக்கிய நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில்…
தோனிக்கு வாழ்த்துக்கள், உங்களுடன் ஆடியதில் 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வெற்றி பெற்றது இனிமையாக இருந்தது.
நாட்டுக்காகவும் அணிக்காகவும் ஆடுகளத்தில் ஒன்றாக போராடினோம். உங்களது எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங். தோனி ஓய்வு அறிவித்த நாள் என்று சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.