Yuvraj Singh : இந்தியாவும் வேண்டாம். ஐபிஎல் போட்டிகளும் வேண்டாம். எனக்கு இதற்கு அனுமதி வேண்டும் – யுவராஜ்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் இனிமேல்

Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் இனிமேல் விளையாடப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

yuvraj 3

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் யுவராஜ் ஓய்வு பெற்றதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டேன் என்று ஏற்கனவே யுவராஜ் தெளிவாக கூறிவிட்டார். இருப்பினும் வெளிநாட்டு நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் யுவராஜ் தெரிவித்தார்.

அதன்படி தற்போது பிசிசிஐ இடம் யுவராஜ் எழுத்துப்பூர்வமாக அனுமதி கேட்டு உள்ளதாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி அந்த அதிகாரி கூறியதாவது : யுவராஜ் சிங் வெளிநாட்டில் நடக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ -யிடம் அனுமதி கேட்டு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் நாடக்கும் போட்டிகளில் எந்த தடையும் இன்றி தான் கலந்துகொள்ள தடையில்லா சான்று வழங்கி வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க அனுமதி கேட்டுள்ளார் என்றும் தெரிகிறது.

Yuvraj

மேலும் வெளிநாட்டு டி20 அணிகள் சில யுவராஜ் சிங்கை அவர்கள் அணியில் விளையாட வைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே அவரது இந்த அனுமதி கடிதம் தற்போது பரிசீலனையில் உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் விரைவில் யுவராஜை வெளிநாட்டு டி20 போட்டிகளில் பார்க்கலாம்.

Advertisement