இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து டேராடூனிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனது காரினை ஓட்டிச் சென்ற ரிஷப் பண்ட் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி விபத்திற்கு உள்ளானார். அப்போது அங்கிருந்த மக்கள் சிலர் அவரை படுகாயங்களுடன் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பிறகு தற்போது அறுவை சிகிச்சைகளை முடித்த ரிஷப் பண்ட் முழு ஓய்வில் இருக்கிறார். மேலும் அவர் ஓய்வில் இருந்து உடல் நலம் தேறிவர ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்பதனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் மற்றும் 50 உலகக் கோப்பை தொடர என முக்கியமான பல தொடர்களில் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.
அதனை தொடர்ந்து தற்போது ரிஷப் பண்ட் தனது வீட்டில் எவ்வாறு நேரத்தை செலவிடுகிறார் என்பது குறித்த சில வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனியாக வாக்கிங் செல்வது, நீச்சல் குளத்தில் வாக்கிங் பயிற்சி மேற்கொள்வது என பல்வேறு வீடியோக்களை அவர் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது.
On to baby steps !!! This champion is going to rise again 🔜 .was good catching up and having a laugh 😅what a guy positive and funny always !! More power to you 🤛 💫 @RishabhPant17 pic.twitter.com/OKv487GrRC
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 16, 2023
இந்நிலையில் உடல் நலம் தேறிவரும் ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் அவரது வீட்டிற்க்கே நேரில் சென்று பார்த்து தற்போது ரிஷப் பண்ட் எப்படி இருக்கிறார் என்பது குறித்த சில முக்கியமான தகவல்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
இதையும் படிங்க : வீடியோ : சூப்பர் கேட்ச் பிடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இடத்தை உறுதி செய்தாரா ராகுல்? பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா
அந்த வகையில் யுவராஜ் சிங் குறிப்பிட்ட அந்த பதிவில் : தற்போது ரிஷப் பண்ட் குழந்தையைப் போன்ற அடிகளை எடுத்து வைக்கிறார். இந்த சாம்பியன் நிச்சயம் எழுச்சி பெறுவார் இப்போதும் அவர் சிரிப்புடன் பாசிட்டிவ்வாகவே இருக்கிறார். உனக்கு நிறைய சக்திகள் கிடைக்கட்டும் என்று ரிஷப் பண்ட் குறித்து யுவராஜ் ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.