என்னுடைய ரெக்கார்டை முறியடிக்கணுனா இந்திய அணியில் இவரால் மட்டுமே முடியும்- யுவ்ராஜ் வெளிப்படை

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவராஜ் சிங் கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசியதுமட்டுமின்றி 12 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அந்த சாதனை இதுவரை 13 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்க படாமல் உள்ளது.

Yuvi 2

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக பல வெற்றிகளைத் தேடி கொடுத்துள்ளார். குறிப்பாக 2007 ஆம் ஆண்டு, 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வெற்றி பெற்ற உலக கோப்பைகளில் முக்கிய வீரராக இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. தனது அதிரடி மூலம் இந்திய அணியை சிறப்பாக வெற்றி பெற வைத்த யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் மூலம் சறுக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து யுவராஜன் ஆட்டத்திறன் குறைய வழி அனுப்பும் போட்டி கூட இல்லாமல் அவரை இந்திய அணி ஓரங்கட்டியது.

அதன்பின்னர் கடந்த ஆண்டு யுவராஜ் சிங் முறைப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரின் இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் யுவராஜ் சிங்கிற்கு இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பல ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வந்த யுவராஜ் சிங் பஞ்சாப் அணி தன்னை நிராகரித்ததாகவும் சில தினங்களுக்கு முன்னர் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது டி20 அரங்கில் தான் நடித்த அதிவேக அரைசதத்தை முறியடிக்கும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது குறித்து தற்போது யுவ்ராஜ் சிங் மனம்திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சர்வதேச டி20 அரங்கில் எனது அதிவேக அரைசதம் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியில் ஒருவருக்கு மட்டுமே உள்ளது. அது யார் என்றால் இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டரான ஹர்டிக் பாண்டியாவுக்கு மட்டுமே என்னுடைய சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இவரை முறையாக யாராவது வழி நடத்தினால் நிச்சயம் என்னுடைய சாதனையை இவர் கண்டிப்பாக முறியடிப்பார் என்று யுவ்ராஜ் சிங் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங் பஞ்சாப் அணியை நான் நீண்ட காலமாக நேசிக்கிறேன். அந்த அணி நிர்வாகத்துக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை. அதன் காரணம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை அதனால். அங்கு இருந்து விலக முடிவு செய்தேன் அதேபோன்று அந்த அணியில் இருந்து நான் வெளியேறிய பின் நான் கேட்ட அனைத்து வீரர்களையும் அவர்கள் அணியில் இணைத்தனர்.

pandya

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வு அதிர்ச்சி அளித்தது. ஐந்து ஒருநாள் போட்டிகள் மட்டும் விளையாடிய ஒரு வீரரை மிடில் ஆர்டரில் களமிறக்கியது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதனை நானும் ஆமோதிக்கிறேன் என்று கூறினார். மேலும் அதேபோன்று 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பைனலில் கண்ட தோல்விக்கு முற்றிலும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

இந்த போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை ஆனால் இலங்கை பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார். இப்போட்டியில் மற்றவர்களும் தடுமாறினார் ஆனால் ரசிகர்கள் மற்றும் மீடியாவும் எண்ணை குறிப்பிட்டு தாக்கிப் பேசினார்கள். அப்போது ரசிகர்கள் சிலர் சண்டிகரில் உள்ள எனது வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். வீட்டிற்கு வந்தபோது நான் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசிய பேட் மற்றும் தொப்பியை பார்த்தேன். அப்போது என் நேரம் முடிந்து விட்டது என்றும் யுவ்ராஜ் உணர்ந்ததாகக் கூறுயதும் குறிப்பிடத்தக்கது.

Yuvi 3

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 2000 ஆவது ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்களையும், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்களையும் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி 1177 ரன்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement