ஓய்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்ட யுவராஜ் சிங் – வீடியோ

Yuvraj
- Advertisement -

நேற்று இரவு நடந்த மூன்றாவது போட்டியில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. இந்தப்போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 213 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 176 ரன்களை குவித்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இந்த போட்டியில் மும்பை சார்பாக யுவராஜ் அதிகபட்சமாக 35 பந்துகளில் 53 ரன்களை குவித்தார்.

Yuvraj

- Advertisement -

இந்த போட்டியின் பின் பத்திரிகையாளருக்கு பேட்டி ஒன்றினை அளித்தார் மும்பை அணி வீரர் யுவராஜ் சிங். இந்த பேட்டியில் ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அதில் யுவராஜ் கூறியதாவது : கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது கிரிக்கெட் வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவே உள்ளது.

என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்த நான் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நான் இதுவரை கிரிக்கெட் போட்டிகளை அனுபவித்து ஆடி வருகிறேன். கிரிக்கெட் மீதுள்ள என்னுடைய ஈடுபாடு இன்னும் குறையவில்லை. ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பேசிய வீடியோ இணைப்பு :

மேலும், ஓய்வு பற்றி நான் இதுவரை எதனையும் நினைக்கவில்லை. கிரிக்கெட் போட்டிகளை நான் மகிழ்ச்சியாக ஆடிவருகிறேன். அந்த மகிழ்ச்சி குறையும்வரை நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டே தான் இருப்பேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.

Advertisement