இந்த ஆண்டு 12 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் வரும் 23ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை அணி வீரர்களும் மும்பை வான்கடே மைதானத்தில் தங்களது பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் அடிப்படை விலையில் ஏலம் போனார். கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வரும் இவர் பல வருடங்களாக பல முக்கிய ஐ.சி.சி நடத்திய தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யுவராஜ் சிங் நேற்று தனது பயிற்சியினை மும்பை மைதானத்தில் துவங்கினார். அவர் மைதானத்திற்க்குள் களமிறங்கி வரும்போது உலகக்கோப்பை இறுதி போட்டி நினைவுகள் வருவதாக கூறிக்கொண்டே இறங்குகிறார். இதோ அந்த வீடியோ :
Start your Monday by watching @YUVSTRONG12 walk down the Wankhede stairs and talk about the 2011 @ICC World Cup ????????#CricketMeriJaan #OneFamily pic.twitter.com/pNysQP5BPp
— Mumbai Indians (@mipaltan) March 18, 2019
இந்த ஐ.பி.எல் இவரின் ஆட்டம் சிறப்பாக அமைந்தாலும் உலகக்கோப்பை இவரது இடம் கேள்விக்குறியே. ஏனெனில், ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் இந்திய அணியில் யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் கோலி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.