12 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் மார்ச் 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா என 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யூசப் பதான் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் யூசப் பதான் இன்று தனது திருமணநாள் கொண்டாட்டத்தை தனது அணி வீரர்களுடன் கொண்டாடினார்.
இதனால், சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவர்க்கும் மிகப்பெரிய விருந்தினை வைத்து அசத்தினார். இதில் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். இதனை ரஷீத் கான் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் :
The team spirit is strong in this @SunRisers side.#IPL #IPL2019 #RCBvMI #SRH #OrangeArmy pic.twitter.com/s1IxFmokUA
— Rooter – Live Sports App (@RooterSports) March 28, 2019
சகோதரர்களான யூசப் பதான் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யூசப் பதான் மட்டும் தற்போது வரை விளையாடி வருகிறார்.