நான் இரட்டை சதமடிக்க அவங்க 2 பேர் தான் காரணம்.. இங்கிலாந்தை துவைத்த ஜெய்ஸ்வால் பேட்டி

Yashasvi Jaiswal 8
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 33/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.

இருப்பினும் அப்போது நங்கூரமாக பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்து இந்தியா 445 ரன்கள் குவிக்க உதவினர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து 319 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

இரட்டை சதத்தின் உத்வேகம்:
அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்களில் டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடிப்பது 214*, கில் 91, சர்பாராஸ் கான் 68* ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 ரன்களை துரத்திய இங்கிலாந்து படுமோசமாக பேட்டிங் செய்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில் முதல் இன்னிங்சில் 33/3 என தடுமாறிய போது சதமடித்து இந்தியாவை காப்பாற்றிய ரோகித் மற்றும் ஜடேஜா தான் இரண்டாவது இன்னிங்ஸில் தாம் இரட்டை சதமடிப்பதற்கான உத்வேகத்தை கொடுத்ததாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் நன்கு செட்டிலாகும் போது பெரிய ரன்கள் குவிக்க முயற்சிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுக்கு தெரியாது. எனவே செட்டிலாகும் போது நான் நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு ரன்கள் வராததால் செஷன் மற்றும் பவுலர்களை பார்த்து விளையாடினேன். பின்னர் ரன்கள் வர ஆரம்பித்த போது என்னுடைய திட்டங்களை பின்பற்றி அடித்தேன்”

இதையும் படிங்க: எங்க ஊர் பத்தி எனக்கு தெரியாதா.. என்னோட 2 சிம்பிள் பிளான் இது தான்.. ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

“கொஞ்ச நேரத்திற்கு பின் முதுகு நன்றாக இல்லை. அப்போதும் நான் அவுட்டாகி செல்ல விரும்பவில்லை. எனவே மீண்டும் விளையாட வந்த போது கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அணிக்கு நான் நல்ல துவக்கத்தை கொடுப்பது வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். நீ செட்டிலாகும் போது பெரிதாக அடி என்று சீனியர்கள் என்னிடம் கூறியுள்ளனர். குறிப்பாக ரோஹித் மற்றும் ஜடேஜா பாய் முதல் இன்னிங்ஸில் விளையாடியது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது” என்று கூறினார்.

Advertisement