எங்க ஊர் பத்தி எனக்கு தெரியாதா.. என்னோட 2 சிம்பிள் பிளான் இது தான்.. ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

Ravindra Jadeja 5
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. குறிப்பாக முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 33/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் அடித்து காப்பாற்றினர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

சொந்த ஊரில் அமர்க்களம்:
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 214*, கில் 91 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 ரன்களை துரத்திய இங்கிலாந்தை 122 ரன்களுக்கு சுருட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட் எடுத்தார். அதனால் 2 – 1* என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா முன்னிலையும் பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு 112 ரன்கள் மற்றும் 7 விக்கெட்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊரில் உள்ள ராஜ்கோட் மைதானத்தைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பதால் பேட்டிங்கில் பந்தை பார்த்து அடிப்போம், பவுலிங்கில் நல்ல இடத்தில் போட்டால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்ற 2 எளிதான திட்டத்தை பின்பற்றி அசத்தியதாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடினமான சூழ்நிலையில் நாங்கள் இருந்த போது நான் ரோகித் சர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தேன். அந்த நேரத்தில் அதிகமாக பதறாமல் பலத்தை திரும்பிப் பார்த்து என்னுடைய ஷாட்டுகளை அடிக்க முயற்சித்தேன். குறிப்பாக பந்தை பார்த்து அடித்தேன். இந்த பிட்ச் பற்றி எனக்கு தெரியும். அதில் முதலில் பேட்டிங் செய்தால் ரன்கள் குவிப்பதற்கு நன்றாக இருக்கும்”

இதையும் படிங்க: அவங்க இல்லாமையே 3வது டெஸ்டில் இந்தியா ஜெயிக்க அது தான் காரணம்.. கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி

“2வது பகுதியில் அது சுழல ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் டாஸ் வென்றதும் முதல் பகுதியில் நாம் நன்றாக பேட்டிங் செய்து இரண்டாவது பகுதியில் பந்து வீச்சில் அசத்துவோம் என்று நினைத்தோம். இந்த பிட்ச்சில் உங்களுக்கு எளிதாக விக்கெட்டுகள் கிடைக்காது. இதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதே சமயம் நீங்கள் நல்ல இடங்களில் பந்து வீசினால் அதற்கு பரிசாக விக்கெட்டுகள் கிடைக்கும்” என்று கூறினார்.

Advertisement