வீக்னெஸ் இல்லாத அவரிடம் ஈகோவுடன் விளையாடி அவுட்டாக்குங்க.. இங்கிலாந்துக்கு டேவிட் லாய்ட் அட்வைஸ்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதற்கு பதிலடியாக இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி தொடரை சமன் செய்து அசத்தியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் சொந்த மண்ணிலேயே கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக செயல்பட்டு இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் வெறும் 22 வயதாகும் யசஸ்வி ஜெய்ஸ்வால் இத்தொடரின் முதல் போட்டியிலேயே அதிரடியாக 80 (76) ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தார். அதை விட இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட தாண்டாத போது தனி ஒருவனாக இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அவர் இரட்டை சதமடித்து 209 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக திகழ்ந்தார்.

- Advertisement -

ஈகோவுடன் மோதுங்க:
அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்தார். இந்நிலையில் தற்சமயத்தில் எளிதாக அவுட்டாகும் அளவுக்கு ஜெய்ஸ்வால் எந்த பலவீனத்தையும் கொண்டிருக்கவில்லை என முன்னாள் இங்கிலாந்து அந்த வீரர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.

எனவே அவருக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னரை வைத்து அடிக்கும் ஆசை காட்டி ஈகோவுடன் விளையாடுங்கள் என்று இங்கிலாந்து ஆலோசனை தெரிவிக்கும் டேவிட் லாய்ட் இது பற்றி டெய்லி மெயில் இணையத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “சுப்மன் கில் 2வது போட்டியில் தக்க சமயத்தில் அசத்தினார். அதே போல இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கான திறமையை கொண்டுள்ளனர்”

- Advertisement -

“ஆனால் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரராக முன்னணியில் இருக்கும் யசஸ்வி ஜெய்ஸ்வால் தான் இங்கிலாந்துக்கு அதிக பிரச்சனையை கொடுத்துள்ளார். எனவே அவரை அவுட்டாக்குவதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும். அதிரடியாக விளையாடக்கூடிய திறமையை கொண்டுள்ள அவரிடம் பெரிய பலவீனம் இல்லை. எனவே நான் சற்று வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வேன்”

இதையும் படிங்க: 500 விக்கெட்டை விடுங்க.. 3வது போட்டியில் கும்ப்ளேவை முந்தி அஸ்வின் படைக்க உள்ள ஆல் டைம் சாதனை

“குறிப்பாக அவருக்கு எதிராக புதிய பந்தில் லெக் ஸ்பின்னரை வைத்து பந்து வீச வைப்பதை விட டீப் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி ஆஃப் ஸ்பின்னரை பந்து வீச வைப்பேன். அந்த வகையில் ஜெய்ஸ்வால் ஈகோவுடன் இங்கிலாந்து சற்று அதிகமாக விளையாடிப் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் நகரில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement