ரோஹித் சர்மா, கே.எல் ராகுலுக்கு அடுத்து டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiwal-Fifty
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நவம்பர் 26-ஆம் தேதியான இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இமாலய ரன் குவிப்பை வழங்கியது.

அதன்படி இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே துவங்கிய இந்த இரண்டாவது டி20 போட்டியின் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்திலிருந்து போட்டியின் கடைசி பந்துவரை அதிரடியில் மிரட்டியது.

- Advertisement -

இதன்காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் என்ற மாபெரும் ரன் குவிப்பை வழங்கியது. இந்திய அணி சார்பாக டாப் 3 வீரர்களும் அரைசதம் அடித்து அசத்தினர்.

குறிப்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், இஷான் கிஷன் 52 ரன்களையும் குவித்து அசத்தினர். அதோடு சூரியகுமார் யாதவ் 19 ரன்களும், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களையும் குவித்தனர். குறிப்பாக இன்று இந்திய அணி சார்பாக பேட்டிங் செய்த அனைவருமே சிக்ஸர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 25 பந்துகளை சந்தித்து ஒன்பது பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : முதல் 6 ஓவர்களிலேயே காட்டடி.. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக சாதனை படைத்த இளம்படை – விவரம் இதோ

அந்த சாதனை யாதெனில் : இதுவரை டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களுக்குள் அரைசதமடித்த இந்திய வீரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரே இருந்தனர். இந்நிலையில் ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் அடித்த அரைசதம் மூலம் பவர்பிளேவிற்குள் அரைசதம் அடித்த 3 ஆவது இந்திய வீரராக அந்த தனித்துவமான சாதனையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement