Williamson : இவர்கள் இருவரும் சென்னை போட்டிக்கு பின் நாடு திருப்புகிறார்கள் – வில்லியம்சன் வருத்தம்

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமை

Williamson
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

Williamson

- Advertisement -

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஐதராபாத் அணிக்காக இங்கிலாந்தின் முன்னணி வீரரான பேர்ஸ்டோவ், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.

இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்றைய சென்னை போட்டி முடிந்த பின்னர் பேர்ஸ்டோவ் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் முகாமில் இணைய இருக்கிறார். இதனால் தொடர்ந்து அவரால் விளையாட முடியாது. அதேபோல் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு செல்ல இருக்கிறார். ஆகவே இரண்டு நட்சத்திர வீரர்களை ஐதராபாத் இழக்கிறது.

Bairstow

இதனால் இரண்டு முன்னணி அதிரடி வீரர்களை ஐதராபாத் அணி இழக்க உள்ளது நமது அணிக்கு பெரிய இழப்பு மட்டுமின்றி என் மனதிற்கு கஷ்டத்தையும் என்று வில்லியம்சன் கூறினார். டேவிட் வார்னர் – பேர்ஸ்டோவ் ஜோடி இந்த சீசனில் 9 இன்னிங்சில் 733 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 517 ரன்களும், பேர்ஸ்டோவ் 445 ரன்களும் குவித்துள்ளனர்.

Bairstow

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் ஐதராபாத் 9 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது. நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் 6-வது வெற்றியாகும். அதன்பின் நான்கில் இரண்டில் வெற்றி பெற்றாலே ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேற முடியும்.

Advertisement