SRH vs CSK : சென்னை அணியை எளிதில் வீழ்த்த இவரே காரணம் – வில்லியம்சன் புகழாரம்

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி நேற்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமை

Williamson
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி நேற்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும் மோதின.

Raina

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதன் பின் வந்த வீரர்கள் பொறுமையாக ஆட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். வார்னர் 50 ரன்களும், பேர்ஸ்டோ 61 ரன்களையும் குவித்து வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பின்பு வந்த வீரர்கள் சுமாராக ஆட அந்த அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகனாக தேர்வானார்.

warnerfier

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய வில்லியம்சன் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி சிறப்பானதாகும். சென்னை அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முதல் பாதியில் அவர்கள் ரன் குவித்த விதம் அபாயமானது. அதன் பின்னர் இரண்டாம் பாதியில் ரஷீத் கான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

rashid-khan

மிடில் ஆர்டரில் ரஷீத் கான் விக்கெட்டுகளை எடுக்க சென்னை அணியை கட்டுக்குள் கொண்டுவந்தோம். மேலும், பீல்டிங் சிறப்பாக செய்து அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம். ரஷீத் கான் கடந்த சில வருடங்களாக சிறப்பாக வீசிவருகிறார். அவர் எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கியமான வீரராக எப்போதும் திகழ்ந்து வருகிறார் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement