இந்த பைனல் மேட்ச்ல நாங்க எங்க பெஸ்ட்ட தான் கொடுத்தோம். ஆனாலும் – தோல்வி குறித்து பேசிய வில்லியம்சன்

Williamson-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கோலாகலமாக நடைபெற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

nzvsaus

- Advertisement -

அதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் என்ற சிறப்பான ரன் குவிப்பை வழங்கியது. இருப்பினும் அதனை சேஸிங் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி டி20 உலகக் கோப்பையையும் முதல் முறையாக கைப்பற்றியது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் அவர்கள் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதாகவே நினைக்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் அடித்த ரன்கள் நிச்சயம் போதுமான ஒன்றுதான்.

warner

ஆனாலும் ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை சிறப்பாக சேசிங் செய்துவிட்டார்கள். ஆஸ்திரேலியா ஒரு அற்புதமான அணி அவர்களால் எப்போதும் இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய போட்டிகளை விளையாட முடியும். மேலும் எந்த ஒரு இடத்திலும் அவர்கள் எங்களுக்கு விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் ஒரு அணியாக சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இது ரொம்ப பெரிசு. இந்த ஒரு விஷயத்தை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு – ஆரோன் பின்ச் பெருமிதம்

இந்த இறுதிப் போட்டியிலும் எங்களால் முடிந்த வரை நாங்கள் எங்களது பெஸ்ட்டை கொடுத்துவிட்டோம், ஆனாலும் இது பத்தவில்லை. மைதானங்கள் மாற்றி மாற்றி விளையாடினாலும் நாங்கள் எங்களை தகவமைத்து சிறப்பாக விளையாடி வந்தோம். இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது அவர்களுடைய திறமைக்கான பரிசுதான் என்று தோல்வி குறித்து பெருந்தன்மையுடன் வில்லியம்சன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement