Kane Williamson : டெல்லி அணி எங்களை விட இந்த விடயங்களில் சிறப்பாக இருந்தது. அதனாலே தோல்வி அடைந்தோம் – வில்லியம்சன்

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Williamson
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Pant

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வில்லியம்சன் கூறியதாவது : இதுபோன்ற மைதானங்களில் இதுபோன்ற பரபரப்பான ஆட்டங்களை தரும். முதல் பாதியில் எங்கள் அணி சிறப்பாக விளையாடியதாகவே கருதுகிறேன். இந்த இலக்கு வெற்றிக்கு போதும் என்றே நினைத்தேன். ஆனால், இந்த போட்டியில் பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய இரண்டுமே எங்களைவிட டெல்லி அணி சிறப்பாக செய்தார்கள். எனவே இந்த போட்டியில் அவர்கள் வெற்றிபெற தகுதியானவர்கள் என்றே நினைக்கிறன்.

Bairstow

மேலும், கடந்த மூன்று போட்டிகளாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் எங்களது அணியில் இல்லை. அது எங்களுக்கு மிகப்பெரிய பலவீனம் இருப்பினும் நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்தோம். இன்றைய நாள் எங்களது நாள் இல்லை அதனால் தோற்றோம். மேலும், டெல்லி அணி இதுபோன்றே சிறப்பாக அடுத்து வரும் போட்டிகளில் விளையாடி தொடரை கைப்பற்றும் என்று நம்புகிறேன் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement