தவறு செய்து மாட்டிக் கொண்ட நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஐசிசி எடுக்க இருக்கும் அதிரடி நடவடிக்கை

Williamson
- Advertisement -

நியூசிலாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது.

NZ

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மூன்று ஓவர்களை வீசினார். பொதுவாக வில்லியம்சன் பந்துவீச இது மிக அரிதான ஒரு விடயமாகும்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் வில்லியம்சன் பந்துவீசிய முறை ஐசிசியின் விதிகளை மீறியதாக இருந்ததாக நடுவர்கள் ஐசிசி இடம் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை ஏற்ற ஐசிசி அவரது பந்துவீச்சை சோதனை செய்தது. மேலும் தற்போது நடுவர்கள் வில்லியம்சன் பந்து வீச்சு குறித்து கூறிய புகார் உண்மை என்று ஐசிசி தெளிவுபடுத்தி உள்ளது.

Williamson

இதன் காரணமாக வில்லியம்சன் பந்துவீச தடை யோ அல்லது அவரது பந்துவீச்சு முறையை சோதிக்க சோதனையும் நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

Advertisement