இன்று துவங்க உள்ள ஐபில் தொடரில் கலந்துகொள்ள சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் ஆகியோர் இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தனர். இவர்களை சிறப்பாக வரவேற்று அணிவீரர்கள் தாங்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்று அங்கும் சிறந்த வரவேற்பினை அளித்தது அணி நிர்வாகம்.
The Kiwi duo have arrived at the SunRisers camp. #OrangeArmy let us welcome @Martyguptill and Kane Williamson with warm hearts. #ReturnOfTheRiser ???? pic.twitter.com/KR1aaRwLoX
— SunRisers Hyderabad (@SunRisers) March 22, 2019
கடந்த ஆண்டு வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு சென்று சென்னை அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வார்னரின் வருகையால் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு வில்லியம்சனே கேப்டனாக தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணிவீரர்களான இவர்கள் அந்த அணிக்காக சிறப்பாக ஆடிவருகின்றனர். மேலும், கடந்த சீசனில் வில்லியம்சன் சன் ரைசர்ஸ் அணிக்காக அதிக ரன்களை விளாசினார். மேலும், இன்றுவரை அவர் மிக சிறப்பான பார்மில் உள்ளார். அதிரடி வீரரான குப்தில் கூட இப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.