கையில் கருப்பு பட்டையுடன் களமிறங்கிய கெயில் மற்றும் லீவிஸ் – சோகமான காரணம் இதுதான்

WI
- Advertisement -

இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் போட்டியில் இன்று சற்றுநேரத்திற்கு முன் துவங்கியது. மழை காரணமாக போட்டி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவர்களில் 158 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

WI 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது கெயில் மற்றும் லீவிஸ் ஆகியோர் கையில் கருப்பு பட்டையுடன் களமிறங்கினார்கள்.

அப்படி அவர்கள் கையில் கருப்பு பட்டையுடன் விளையாட வந்ததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான லீவிஸ் அவர்களின் பாட்டி காலமானதால் அவர்களின் மறைவுக்கு துக்கத்தை அனுசரிக்கும் வகையில் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் கருப்பு பட்டையுடன் விளையாட வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement