கெயிலை மட்டும் அணியில் எடுத்து சுனில் நரேனை தேர்வு செய்யாதது ஏன் ? – நிர்வாகம் கொடுத்த விளக்கம்

narine
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரானது மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த மூன்று போட்டிகளுக்கான டி20 வெஸ்ட் இண்டீஸ் அணியை தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Wi-3

- Advertisement -

அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரரான கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் 41 வயதான கிரிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே வயது மூப்பின் காரணமாக அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட கெயில் கடைசியாக விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில் மீண்டும் தேசிய அணிக்காக அவர் விளையாட இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐபிஎல் தொடர் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி உள்ள அவரது திறமையின் அடிப்படையில் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து தேசிய அணிக்காக விளையாட இருக்கிறார்.

gayle 2

இதேபோன்று மூத்த வேகப்பந்து வீச்சாளரான பிடல் எட்வர்ட்ஸ் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் இணைந்து விளையாட இருக்கிறார். இவர்கள் இருவரது சேர்க்கை அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. ஆனால் அதேவேளையில் டி20 ஸ்பெஷலிஸ்ட் மற்றும் அனுபவம் வீரரான சுனில் நரைனுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுனில் நரைன் ஏன் அணியில் சேர்க்க வில்லை என்பது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேர்வாளர் என ரோஜர் ஹார்பர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

narine

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தான் தயாராக இல்லை என சுனில் நரைன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தற்போது மீண்டும் அவர் re-entry கொடுப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே அவர் இந்த தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை அவர் முழுவதும் தயாரான பின்னர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement