MS Dhoni : தோனிக்கு நன்றி என்ற வார்த்தையை மட்டும் கூறினால் பத்தாது – மனம் திறந்த வாட்சன்

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமை

Watson-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Dhoni 2

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Watson

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் வாட்சன் கூறியதாவது : இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடினேன். சென்னை அணியின் கேப்டன் தோனிக்கும், பயிற்சியாளர் பிளெமிங்க்கும் நன்றி என்று சொன்னால் அந்த வார்த்தை பத்தாது அந்த அளவிற்கு அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் சரியாக விளையாடாதபோதிலும் என் திறமை மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கை துளி அளவும் குறையவில்லை.

நான் நிறைய அணிகளில் விளையாடி உள்ளேன். அப்போது ஒருசில போட்டிகளில் நன்றாக விளையாட வில்லை என்றால் ஒருசில போட்டிகளில் என்னை நீக்குவார்கள். ஆனால், சென்னை அணி என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த தொடரில் நான் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டேன். ஆனால், சென்னை அணி எனக்கு தற்போது இதில் விருப்பமோ அதை மட்டுமே என்னிடம் எதிர்பார்க்கிறது அதனால் என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிகிறது என்று வாட்சன் கூறினார்.

Advertisement