MS Dhoni : வாட்சனின் மகனுக்கு தல தோனியை இதனால் ரொம்ப பிடிக்குமாம் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர்

Watson
- Advertisement -

நேற்று முன்தினம் நடந்த சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்ற பின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த வாட்சன் தனது மகனை பேட்டி எடுத்தார். அப்போது வாட்சன் தனது மகனிடம் உனக்கு பிடித்த கிரிக்கெட்டர் யார் என்று கேட்டதற்கு உங்களைத்தான் என்று கைநீட்டி சொன்னார். உடனே என்னைத்தவிர சென்னை அணியில் யாரை பிடிக்கும் என்று கேட்க தோனியை ரொம்ப பிடிக்கும். அவர் உங்களை விட பெரிய சிக்ஸர்களை அடிக்கிறார் அதனால் தோனியை மிகவும் பிடிக்கும் என்று வாட்சனின் மகன் கூறினார்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Watson

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement