வாட்சனே இப்படி சொன்னதுக்கு பிறகு தோனி நிச்சயம் அடுத்த ஆண்டு விளையாடாமலா இருப்பாரு ? – தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி

Watson
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கான ரசிகர்களின் ஆதரவு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அதிகரித்தது. வருடாவருடம் கிடைக்கும் வரவேற்பினால் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 12 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இம்முறை பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

watson

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்தி வைத்தது. இதனால் பல இளம் வீரர்களுக்கும், இந்திய அணியின் முன்னணி வீரரான தோனிக்கு மிகப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தோனி இந்திய அணியில் இணையும் வாய்ப்பை எதிர் பார்த்திருந்தார். ஆனால் தற்போது தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தோனியின் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் இந்தத் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் : இன்னும் சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கிறேன். அதனால் நான் இன்னும் ஓராண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் என்று நினைக்கிறேன்.

watson

சிஎஸ்கே அணிக்கான அன்பு இந்தியா முழுவதும் பரவியுள்ளது. சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சிஎஸ்கே அணிக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதை பார்க்கும் போது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். இந்த கொரோனா வைரஸ் விரைவாக கடந்து போகும். அதனால் நான் மீண்டும் சென்னை அணியுடன் விளையாடும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மேலும் கடந்து இன்னும் ஒரு ஆண்டு என்னால் சென்னை அணிக்காக விளையாட முடியும் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் வெளிநாட்டில் ஆடிவரும் வாட்சனின் வயது அதிகரித்திருந்தாலும் சிஎஸ்கே அணிக்காக விளையாட முடியும் என்று கூறி உள்ளதால் தற்போது தோனியின் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஏனெனில் 38 வயதான தோனி இந்திய அணியில் நிராகரிக்கப்பட்டாலும் சென்னை அணி கேப்டனாக இன்றும் தொடர்கிறார். இந்த ஐபிஎல் அவரது விளையாட்டை காண ஆவலாக இருந்த ரசிகர்கள் அடுத்த ஆண்டும் அதே எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.

Dhoni

வாட்சனின் இந்த பேட்டிக்கு பிறகு தோனியின் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் நிச்சயம் தோனி அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. வாட்சனே இவ்வாறு கூறியுள்ளதால் தொடர்ச்சியாக டச்சில் இருக்கும் தோனியாலும் விளையாட முடியும் என்பதால் இந்த வருடம் இல்லை என்றாலும் அடுத்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்றும் தங்கள்து ஆதரவு தோனிக்கு தொடரும் என்றும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement