சொல்லி வைத்து சம்பவம் செய்த ஷேன் வாட்சன் – வைரலாகும் வாட்சனின் ட்விட்டர் பதிவு

Watson-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

cskvskxip

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..

17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

faf

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு முன்பு சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு துவக்க வீரர்கள் சரியாக ஆடாத தான் காரணம் என்றும் இனிவரும் போட்டிகளில் நாங்கள் மிடில் ஆர்டருக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் துவக்கத்தில் அதிரடியாக ஆடுவோம் என்று தெரிவித்து நேற்றைய போட்டியில் களமிறங்கினார். அவர் கூறியபடியே நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடியது மட்டுமின்றி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்ட நாயகனாக திகழ்ந்தார்.

அதற்கும் முன்னதாக கிங்ஸ் லெவன் அணிக்கு முந்தைய தினம் இனி வரும் போட்டி ஒரு சிறப்பான போட்டியாக அமையும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விட்டு நேற்றைய போட்டியில் களமிறங்கி அதிரடியில் அசத்தியுள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement