வம்பிழுத்த இஷாந்த். மோதலில் ஈடுபட்ட சென்னை அணி வீரர் வாட்சன் – வீடியோ

Ishanth
- Advertisement -

நேற்றைய போட்டியில் இஷாந்த் சர்மா சென்னை அணியின் வீரரான ராயுடுவின் விக்கெட்டை வீழ்த்திய பின் வாட்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், வாட்சன் சிரித்தபடி திரும்பி சென்றார். ஆனால், மறுமுறை டெல்லி அணி வீரரான ரபாடா வாட்சன் பார்த்து எதோ கூற கோவப்பட்ட வாட்சன் அவரை கடுமையாக முறைத்தபடி அம்பயரிடம் இதுகுறித்து முறையிட்டார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாட்சன் எப்போதும் பெரிய அளவில் தனது கோவத்தினை வெளிப்படுத்தமாட்டார். அந்த வாக்குவாதம் எதனால் ஏற்பட்டது என்று எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுபோன்ற நிகழ்வு நடந்தபின் ஆச்சரியமான ஒரு செயலும் நடந்தது. போட்டிக்கு பிறகு ரபாடாவிடம் சாதாரணமாக சிரித்தபடி பேசினார் வாட்சன் என்பது குறிப்பிடதக்கது.

நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Iyer

பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்

Advertisement