ஏற்கனவே 2 பேர் வெளியேறிய நிலையில் தற்போது டி20 தொடரில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல் – அதிர்ச்சி தகவல்

INDvsWI
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற இருக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் தற்போது இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

prasidh 1

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த டி20 தொடருக்கு முன்னதாக துவக்க வீரர் கே.எல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகினர். இந்நிலையில் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு இந்திய வீரர் விலகியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக தற்போது நடைபெற இருக்கும் இந்த டி20 தொடரிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Sundar-1

இவ்வேளையில் அவர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்த காயத்திற்கான சிகிச்சை பெற கொல்கத்தாவிலிருந்து அவர் நாளை பெங்களூரு சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனை உறுதி செய்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் வாஷிங்டன் சுந்தருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மூன்று வாரங்கள் பெங்களூரில் தங்கி சிகிச்சை எடுக்க உள்ளார். இதன்காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார் என்று கூறியுள்ளது. ஏற்கனவே ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் வெளியேறிய நிலையில் ருதுராஜ் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னாவை நாங்க வாங்காம விட்டதுக்கு இது மட்டும் தான் காரணம் – காரணத்தை சொன்ன நிர்வாகம்

ஆனால் டி20 தொடர் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வாஷிங்டன் சுந்தர் தற்போது திடீரென விலகி உள்ளதால் அவருக்கு மாற்று வீரரை நியமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 15-வது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் கலந்துகொண்ட வாஷிங்டன் சுந்தரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement