வாட்சனை க்ளீன் போல்ட் ஆக்கிய தமிழ்நாட்டு சிங்கம். பவர்பிளே ஓவரில் மீண்டும் அசத்தல்

Watson-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன்பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே அடித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ரன்களும், அறிமுக வீரர் ஜெகதீசன் 33 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

இதனால் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி பெற்ற இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக கிரிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வானார்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சென்னை அணியை காப்பாற்ற வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் மட்டுமே இருக்கின்றனர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து அவர்கள் இருவரையும் ஆட்டமிழக்க வைத்து சுந்தர் பவர் பிளே ஓவர்களிலேயே மீண்டும் பெங்களூர் அணிக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுத்தார். மூன்று ஓவர்கள் வீசிய சுந்தர் வெறும் 16 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

அதிலும் குறிப்பாக வாசனுக்கு எதிராக அவர் வீசிய பந்து அவரை கிளீன் போல்ட் ஆக்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 18 பந்துகளை சந்தித்த மூன்று பவுண்டரிகளுடன் 14 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement