- Advertisement -
ஐ.பி.எல்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்கள் 2 பேரே காரணம் – வார்னர் புகழாரம்

ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களும், ஸ்டோக்ஸ் 30 ரன்களும் குவித்தனர். சன் ரைசர்ஸ் அணி சார்பாக இந்தப் போட்டியில் முதன்முதலாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்ற ஹைதராபாத் அணி துவக்கத்தில் வார்னர் இஸ்ரோ என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

- Advertisement -

ஆனால் அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்களுடனும், 51 பந்துகளைச் சந்தித்த விஜய் சங்கர் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக மணிஷ் பாண்டே தேர்வானார்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் துவங்கி விதம் சிறப்பாக இருந்தது. பவர் பிளேவிற்கு பிறகு எதிரணியை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம். இது ஒரு முழுமையான போட்டியாக எங்களுக்கு அமைந்தது. மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

- Advertisement -

அவர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இந்த வெற்றியை நான் கருதுகிறேன். நான் ஆட்டமிழந்து வெளியேறியதும் நான் கொஞ்சம் வெறுப்படைந்தேன். இருப்பினும் இந்த போட்டியை அவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக கொண்டு சென்றனர். மைதானத்தில் சிறிதளவு ஸ்விங் இருந்ததால் துவக்கத்தில் விளையாட சிரமப்பட்டோம். ஆனாலும் அதில் இருந்து மீண்டு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து மனிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் எங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்.

பந்து வீச்சிலும் எங்கள் அணி சிறப்பாகவே செயல்பட்டனர். ராஜஸ்தான் அணி ஒருகட்டத்தில் சிறப்பாக சென்று கொண்டிருக்க மிடில் ஓவர்களில் நாங்கள் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்டத்தின் இலக்கை குறைத்தோம். எங்களது பேட்டிங்கின் துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தாலும் இளம் வீரர்கள் தங்களது திறனை நிரூபித்து இந்த போட்டியில் வெற்றியை எங்களுக்கு பரிசாக பெற்றுக் கொடுத்துள்ளனர் என்று வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.

- Advertisement -
Published by