பெங்களூரு அணிக்கெதிராக வெற்றி பெறுவோம் என்று ஏற்கனவே தெரியும் – வெற்றி குறித்து பேசிய வார்னர்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 52 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

RCBvsSRH

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பிலிப் 32 ரன்களையும், டிவில்லியர்ஸ் 24 ரன்களும் குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் ஷர்மா மற்றும் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஹா 39 ரன்களையும், ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 26 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சந்தீப் சர்மா தேர்வானார்.

sandeep

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : இந்த போட்டியில் விளையாட வரும் போது எங்களுக்கு புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணியுடன் விளையாட போகிறோம் என்ற மனநிலை வந்துவிட்டது. இந்த போட்டியில் வென்றால் அடுத்த போட்டியிலும் வெல்வோம் என்று நினைத்தோம் அதன்படி அடுத்த போட்டி மும்பை அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் டாப் ஆர்டரில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து நிறைய யோசித்தோம். மேலும் பவுலிங்கிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கலந்தாலோசித்து அதன்படியே இன்று சரியான படி பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டுமே சிறப்பாக அமைந்தது. மைதானம் எவ்வளவு ஸ்லோவாக இருக்கிறது என்பதை புரிந்து எங்களது வீரர்கள் அதனை சரி செய்து விளையாடினார்கள்.

holder

பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஹோல்டர் எங்கள் அணியின் சிறப்பான ஆல்ரவுண்டர் இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அறிந்திருந்தோம். அடுத்த போட்டியிலும் இதே போன்று நடக்கும். 2016-ஆம் ஆண்டு இதே போன்று மூன்று போட்டிகளைக் வென்று பிளேஆப் சுற்றுக்கு சென்றோம் என்று வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement