மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – வார்னர் புகழாரம்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியாக 56வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 36 ரன்களையும், இஷான் கிஷன் 33 ரன்களை குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நதீம் 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை தக்க வைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் சஹா இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 85 மற்றும் 58 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சபாஷ் நதீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

srh

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : பஞ்சாப் அணிக்கு எதிரான எளிய இலக்கை துரத்த முடியாமல் நாங்கள் தோற்றதால் இன்றைய போட்டியின் சேசிங் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சில வீரர்களுக்கு அவர்கள் ஓய்வு எடுத்தும் இந்த மைதானத்தில் 150 ரன்கள் குவித்தது சிறப்பான ஒரு விடயமாகும். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அவர்களை கட்டுப்படுத்தினர்.

- Advertisement -

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து எங்கள் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயமடைந்து வெளியேறி வந்தாலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடி வருகிறோம். எங்களது பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் சிறப்பாகவே பந்து வீசி வருகின்றனர். இந்த போட்டியிலும் எங்களுக்கு வெற்றிக்கான உத்வேகத்தை கொடுத்ததில் அவர்கள் தான் காரணம் மேலும் அடுத்த போட்டியிலும் இதே போன்று சிறப்பாக விளையாட இருக்கிறோம்.

Sandeep

எங்கள் அணிக்கும் எனக்கும் இது ஒரு நல்ல துவக்கம். சில போட்டிகளை நாங்கள் இழந்து இருந்தாலும் மீண்டும் சிறப்பாக விளையாடி வருகிறோம் என்று வார்னர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement