தோல்வி அடைந்தாலும் இந்த தொடரின் சிறந்த பொக்கிஷத்தை நாங்கள் கண்டறிந்தோம் – வார்னர் மகிழ்ச்சி

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.

srhvsdc

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 50 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். மேலும் மற்றொரு துவக்க வீரர் என ஸ்டாய்னிஸ் 38 ரன்களையும் இறுதி நேரத்தில் 22 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் அதிரடியாக 42 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 33 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக ரபாடா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் அறிவிக்கப்பட்டார்.

rabada

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : எந்த ஒரு அணியும் எங்களுக்கு சிறப்பான துவக்கத்தை அளிக்க வாய்ப்பு தரமாட்டார்கள். டெல்லி போன்ற சிறந்த அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான துவக்கத்தை பெற்றிருக்கவேண்டும். இருப்பினும் இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பாக நடராஜனை கருதுகிறேன். இந்த தொடர் முழுவதும் அவர் சிறப்பாக விளையாடினார். அதுமட்டுமின்றி ரசித் கானும் பவுலிங்கில் அசத்தினார். மணிஷ் பாண்டே நம்பர் 3 இல் சிறப்பாக விளையாடினார். எங்கள் அணிக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

Nattu-2

மைதானத்தில் நாங்கள் ஒவ்வொரு முறை பீல்டிங் செய்யும் போதும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினோம். இருப்பினும் தோல்வி அடைந்தது வருத்தமாக இருந்தாலும் அடுத்த முறை சிறப்பாக திரும்பி வருவோம் என வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement