இந்த தலைமுறையின் 3 சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றால் அது இவர்கள் தான் – வார்னர் கூறிய அந்த 3 வீரர்கள் இவர்கள்தான்

Warner
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறையாததால் இந்த தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.

அதைத்தொடர்ந்து மேலும் தற்போது அடுத்து சர்வதேச போட்டிகள் எப்போது துவங்கும் என்று சந்தேகம் எழுந்து வரும் நிலையில் ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளமான மூலமாக தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். மேலும் வீரர்களுக்கு உள்ளேயும் சமூக வலைதளம் மூலமாக நேரடியாக கலந்துரையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தில் பல்வேறு வீரர்களும் கிரிக்கெட் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் நேரடியாக கலந்துரையாடினர்.

Williamson-1

அந்தக் கலந்துரையாடலில் வில்லியம்சன் அவருடைய கிரிக்கெட் அனுபவங்களையும் அவருக்கு பிடித்த வீரர்களில் பற்றி கூறினார். அதன் பிறகு தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் குறித்து வார்னர் நேரடியாக லைவில் தெரிவித்தார். அதன்படி டேவிட் வார்னர் கூறுகையில் : உங்களை (கேன் வில்லியம்சன்), ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகியோரை இந்த தலைமுறையின் தலை சிறந்த பேட்ஸ்மேன் ஆக தேர்வு செய்கிறேன் என்றார்.

Smith

நீங்கள் மூவரும் விளையாடும் ஆட்டம் நிச்சயம் சிறந்த வீரர்களுக்கு உண்டானதே. இந்த தலைமுறை உங்களைப் போன்ற மூன்று பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டுக்கு கிடைத்த பலம் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வில்லியம்சன் உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தது ரொம்ப உணர்ச்சிகரமானது என்றும் அது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய நேரம் அந்த நேரத்தில் நான் பொறுமையாக இருந்து சரியானதுதான் என்றும் வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement