வார்னரின் மகள்களுக்கு இந்திய வீரரான இவருடன் செல்பீ எடுக்க ஆசையாம் – வார்னர் வெளியிட்ட தகவல்

Warner
- Advertisement -

கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். அதேபோல் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பெரும் விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Warner 3

- Advertisement -

இதன் காரணமாக வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வீட்டிற்குள் இருக்கும் தனது நேரத்தை தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவழித்து வருகிறார். டேவிட் வார்னர் மற்றும் அவரது மகள்கள் மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் சேர்ந்து உற்சாகமாக டிக்டாக்வீடியோ செய்து ஜாலியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றில் பேசிய டேவிட் வார்னரின் மகள்கள் இருவர் விராட் கோலியை பற்றி பேசியுள்ளனர். அதில் தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் பட்டியலையும் தெரிவித்தனர். குறிப்பாக யாருடன் உங்களுக்கு செல்பி எடுக்க விருப்பம் என்று கேட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் செல்பி எடுக்க மிகவும் விரும்புகிறேன் என்று அந்த இளம் வாண்டுகள் கூறியுள்ளார்.

warner 1

அதனை தொடர்ந்து பேசிய டேவிட் வார்னர் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது சற்று கடினம் தான். ஆனால் எங்கு சென்றாலும் ரசிகர்கள் மிகவும் முக்கியம். இதனால் ரசிகர்கள் இல்லாமல் விளையாடும் போட்டிகள் நன்றாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் இன்றி தான் விளையாட தயாராக இல்லை என்றும் வார்னர் தெரிவித்தார்.

warner 2

ஆனால் இந்த கொரோனா வைரஸ் அதிகஅளவு பரவுவதற்கு முன்னர் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்ற போட்டியில் வார்னர் பங்கேற்றார். அதுமட்டுமின்றி அந்த போட்டியில் அரைசதம் அடித்த அவர் ரசிகர்கள் இல்லாததால் தான் அரைசதம் அடித்ததை மறந்து தனது கொண்டாட்டத்தை செய்ய தவறியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement