கேவலமான அம்பயரிங் ! கொந்தளித்த பண்ட், சீட்டர் சீட்டர் என முழங்கிய ரசிகர்கள் – நடந்தது என்ன

Umire Rovman Powell
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வான்கடே மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததையடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தூத் படிக்கள் ஆகியோர் இணைந்து முதல் ஓவரிலிருந்தே அதிரடி சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதில் ஒருபுறம் படிக்கல் கம்பெனி கொடுக்கும் வகையில் மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் பட்டாசாக பேட்டிங் செய்த பட்லர் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.

Jos Buttler Padikkal

- Advertisement -

முதல் விக்கெட்டுக்கு டெல்லி பவுலர்களை பிரித்து மேய்ந்து புரட்டி எடுத்த இந்த ஜோடி 155 ப்ரம்மாண்ட பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த போது 7 பவுண்டரி 2 சிக்சருடன் 54 (35) ரன்கள் எடுத்த படிக்கல் ஆட்டமிழந்தார்.

பட்லர் 3-வது சதம்:
மறுபுறம் ஏற்கனவே 2 சதங்களை அடித்து முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் தொடர்ந்து டெல்லி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து 65 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சர் உட்பட சதமடித்து 116 ரன்கள் விளாசி 18-வது ஓவரில் அவுட்டானர். இது இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதமாகும். இறுதியில் அவருடன் மிரட்டலாக ரன்களை அடித்த கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46* ரன்களை விளாசி அபார பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 2 விக்கெட் வீழ்ந்த ராஜஸ்தான் 222 ரன்களை எடுத்தது. இது இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

Jos Buttler 116

அதை தொடர்ந்து 223 என்ற மெகா இலக்கை துரத்திய டெல்லிக்கு 43 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் 5 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 28 (14) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சர்ப்ராஸ் கான் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அதே சமயம் மற்றொரு தொடக்க வீரர் பிரிதிவி ஷா 5 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 37 (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

டெல்லி போராடி தோல்வி:
இருப்பினும் நடுவரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 4 பவுண்டரி 2 சிக்சர்கள் உட்பட 44 (24) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அவரை தொடர்ந்து வந்த அக்சர் பட்டேல் 1 (4) ஷர்துல் தாகூர் 10 (7) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அந்த வேளையில் போராடிய லலித் யாதவும் 3 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 37 (24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரோவ்மன் போவல் அதிரடியாக 5 சிக்ஸருடன் 36 (15) ரன்கள் எடுத்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207/8 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி போராடி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.  இதனால் ராஜஸ்தான் 15 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இந்த அபார வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் பங்கேற்ற 7 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்த டெல்லி 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

வெடித்த அம்பயர் சர்ச்சை:
முன்னதாக இந்த போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட போது ரோமன் போவல் அதிரடியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதில் 3-வது பந்தை புல் டாசாக வீசப்பட்ட நிலையில் அதை போவல் சிக்சர் அடித்த போதிலும் அந்த பந்து இடுப்புக்கு மேலே வந்தது. ஆனால் இடுப்புக்கு மேல் வந்த அந்தப் பந்தை அம்பயர் நோ பால் கொடுக்காதது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த ரோவ்மன் போவல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பெவிலியனுக்கு அழைத்தார். அதே காரணத்துக்காக டெல்லியின் பயிற்சியாளர் பர்வின் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அந்தக் கடைசி ஓவரில் மிகப்பெரிய பரபரப்பும் சர்ச்சையும் நிலவிய நிலையில் அம்பயர் தனது முடிவில் பின்வாங்காமல் டெல்லி வீரர்களை பெவிலியனுக்கு அனுப்ப மறுத்ததால் ஒருவழியாக போட்டி நடைபெற்று முடிந்தது.

ஆனால் தெளிவாக நோபால் தெரிந்தும் அதை கொடுக்காமல் விட்டதுடன் 3-வது அம்பையரை அணுகாமல் கர்வத்துடன் நடந்துகொண்ட களத்தில் இருந்த அம்பயர்களை வான்கடே மைதான ரசிகர்கள் அனைவரும் நேரிடையாக “சீட்டர் சீட்டர்” என்று கோஷமிட்டு திட்டி தீர்த்தனர். இதே காரணத்துக்காக நிறைய முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் சமூக வலைதளங்களில் அந்த அம்பயர்களை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement