ரோஹித் சர்மா தவறவிட்டாலும் இவரு பாத்துப்பாரு. கவலைப்பட வேணாம் – வி.வி.எஸ் லக்ஷ்மனன் நம்பிக்கை

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறை இந்திய அணி முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் அண்மைக்காலமாகவே அயல் நாட்டு மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

IND

- Advertisement -

அதன்படி இம்முறை தென்னாபிரிக்க மண்ணிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி நிச்சயம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியை பதிவு செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் இடம் பெற்றிருந்த துணைக்கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒருபுறம் மாயங்க் அகர்வால் நிச்சயம் துவக்க வீரராக களம் இறங்குவார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டாவது ஓபனராக மூன்று பேர் போட்டியில் உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று வி.வி.எஸ் லக்ஷ்மனன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது ரோகித் சர்மாவுடன் இணைந்து ராகுல் விளையாடிய விதம் சிறப்பான ஒன்று. அயல்நாட்டு மைதானத்திலும் அவருடைய பேட்டிங் பிரமாதமாக இருந்தது. என்னை பொறுத்தவரை நிச்சயம் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் ரோகித் சர்மா வெளியேறி இருந்தாலும் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னால அதப்பத்தி பேசமுடியாது. விராட் கோலி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு – காண்டாகி பதிலளித்த கங்குலி

எப்போதுமே தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வரும் ராகுல் இம்மமுறையும் இந்த தொடரில் தனது வேலையை கச்சிதமாக செய்து கொடுப்பார் என்றும் லட்சுமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement