அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தமிழக வீரரான இவர் கெத்து காட்டுவார் – வி.வி.எஸ் லஷ்மண் நம்பிக்கை

Laxman-1
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக தொடர்ந்து யார்க்கர் வீசும் இவரது திறன் அனைவரது கண்களிலும் பட்டது. மேலும் இந்திய அணியில் தேர்வு குழுவினரும் இவரது இந்த திறனால் ஈர்க்கப்பட்டு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன்முறையாக வாய்ப்பையும் வழங்கியுள்ளனர்.

nattu

- Advertisement -

தற்போது இந்தியா டி20 கிரிக்கெட் அணியில் தேர்வாகி விளையாட இருக்கும் இவருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகருமான லக்ஷ்மணன் அவரின் திறமை குறித்து பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சர்வதேச பேட்ஸ்மேன்களை தனது சிறப்பான பந்து மூச்சு திக்குமுக்காட வைத்த இவர் ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர் வீசி அசத்தினார். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள லட்சுமணன் கூறுகையில் : எல்லோருக்கும் நடராஜனை ஒரு யார்க்கர் ஸ்பெஷலிஸ்டாக தான் தெரியும். ஆனால் அவரிடம் அதைவிட மேலான ஒரு திறமை இருக்கிறது.

Nattu

அதாவது அவரது பந்து வீச்சில் வேரியேஷன் காட்டக்கூடிய வல்லமை கொண்டவர் என்பதை நான் சொல்லியாக வேண்டும். அவரால் ஷார்ப் பவுன்சர், ஆப் கட்டர், ஸ்லோவர் பால், அவுட் சைட் யார்க்கர் என வெரைட்டியாக வீச முடியும். ஏனோ அதனை இந்த ஐபிஎல் தொடரை செய்ய தவறிவிட்டார். குறிப்பாக புது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி திறமையும் அவரிடம் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் இவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Nattu-2
.
அதற்கு உதாரணமாக ஆர்சிபி அணியின் ஏ.பி.டி விக்கெட்டை வீழ்த்தியதே அதற்கு சான்று என புகழ்ந்துள்ளார். தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய தொடரே அவருக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement