விடைபெறும் ராகுல் டிராவிட்.. இந்தியாவின் அடுத்த கோச் யார்? போட்டியில் இருக்கும் 2 ஜாம்பவான்கள்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகத்துடன் அமைந்தது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய 9 வெற்றிகளை கண்ட இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்தது. இருப்பினும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

அப்படி சிறப்பாக செயல்பட்டும் கோப்பை கிடைக்காத காரணத்தால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கண்ணீர் விட்டு ஏமாற்றத்தை சந்தித்தனர். அதை விட 2003இல் வீரராக ஆஸ்திரேலியாவிடம் ஃபைனலில் தோல்வியை சந்தித்த ஜாம்பவான் ராகுல் டிராவிட் 2007இல் கேப்டனாக படுதோல்வியை சந்தித்து தற்போது பயிற்சியாளராக கூட 2023 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் விடை பெற உள்ளார்.

- Advertisement -

புதிய கோச்:
ஏனெனில் 2021 டி20 உலகக்கோப்பையுடன் விடைபெற்ற ரவி சாஸ்திரிக்கு பின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் பதவி காலம் இத்தொடருடன் நிறைவு பெற்றுள்ளது. மேலும் ராகுல் டிராவிட் தலைமையில் 2023 ஆசிய கோப்பை தவிர்த்து 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் இந்தியா தோல்விகளையே சந்தித்தது.

அதனால் உங்கள் சேவை இத்துடன் போதும் என்பதே டிராவிட் பற்றி ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கு விவிஎஸ் லட்சுமண் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரிடம் போட்டி நிலவி வருகிறது. அதில் 2022 ஐபிஎல் கோப்பையை குஜராத்துக்காக வென்ற அனுபவமிக்க நெஹ்ராவை விட தற்போது என்சிஏ இயக்குனராகவும் இந்திய வீரர்களால் மதிக்கப்படும் அளவுக்கு தகுதியும் திறமையும் கொண்டுள்ள லக்ஷ்மண் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “இந்த வேலைக்கு லக்ஷ்மன் ஆர்வத்தை காட்டியுள்ளார். உலகக் கோப்பை ஃபைனலில் அகமதாபாத் நகருக்கு சென்ற அவர் பிசிசிஐ நிர்வாகிகளிடம் இதைப்பற்றி பேசியுள்ளார். அதில் இந்திய அணியின் நீண்ட கால பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு அவர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்”

இதையும் படிங்க: எல்லாமே உங்க இஷ்டம் தான்.. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு – பி.சி.சி.ஐ வைத்த முக்கிய கோரிக்கை

“அவருடைய பயிற்சியாளர் பயணம் அடுத்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் துவங்கலாம். மறுபுறம் ராகுல் டிராவிட் அப்பதவியில் நீடிக்க விரும்பவில்லை. மேலும் தம்முடைய சொந்த ஊரான பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் ஏற்கனவே செய்த அதே இயக்குனர் வேலையை செய்வதற்கு அவர் விரும்புகிறார்” என்று கூறினார். மேலும் விக்ரம் ரத்தோர், பாராஸ் மாம்ப்ரே போன்ற துணைப் பயிற்சியாளர்கள் லக்ஷ்மண் விரும்பினால் மட்டுமே மாற்றம் செய்யப்படுவார்கள் இல்லையேல் தொடர்வார்கள் என்று தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement