இந்தியர்கள் ஏழை நாட்டுக்கு போக மாட்டோம்.. உங்க காசு அதுக்கே பத்தாது.. கில்கிறிஸ்ட்டை கலாய்த்த சேவாக்

Virender Sehwag 5
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் வழக்கம் போல இந்த வருடமும் அனைத்து அணிகளிலும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் வெளிநாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் சேர்ந்து விளையாடுவதாலேயே ஐபிஎல் என்பது சர்வதேச தொடருக்கு நிகரான தரத்தைக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பணத்தையும் சம்பாதித்துக் கொண்டு இந்திய சூழ்நிலைகளை நன்றாக தெரிந்து கொள்கின்றனர். அதனால் ஐசிசி தொடர்களில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் அடித்து நொறுக்கும் வெளிநாட்டவர்கள் கோப்பையை தட்டிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இந்திய வீரர்களை மட்டும் வெளிநாட்டு தொடர்களில் பிசிசிஐ அனுமதிக்காமல் இருந்து வருகிறது.

- Advertisement -

சேவாக் கருத்து:
அதனால் வெளிநாடுகளில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்றே சொல்லலாம். அதன் காரணமாக தற்போதைய இந்திய வீரர்களையும் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களையும் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல வருடமாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு பிசிசிஐ இன்னும் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் உங்களைப் போன்ற இந்திய வீரர்கள் ஏன் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை என சேவாக்கிடம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கேட்டார். அதற்கு நேருக்கு நேராக கலாய்க்கும் வகையில் சேவாக் பேசியது பின்வருமாறு. “வெளிநாட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் பணக்கார மக்கள். எனவே ஏழை நாடுகளுக்கு நாங்கள் செல்ல வேண்டியதில்லை. இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட நான் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தேன்”

- Advertisement -

“அப்போது பிக்பேக் தொடரில் விளையாடுவதற்கானஅழைப்பு எனக்கு வந்தது. அதற்கு எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று நான் கேட்டேன். அவர்கள் 100000 டாலர்கள் என்று சொன்னார்கள். ஆனால் அது நான் எனது சுற்றுலாவுக்கு பயன்படுத்தக்கூடிய பணம் என்று அவர்களிடம் சொன்னேன். ஹோட்டல் செலவுக்கு அது போதாது. பிக்பேஷ் அல்லது ஹண்ட்ரட் போன்ற தொடரில் ஒரு மாதம் விளையாடுவதற்காக உங்களுக்கு 100000 அல்லது 200000 டாலர்கள் கொடுக்கப்படுகிறது. எனவே மில்லியன் டாலர்களைப் பற்றி நீங்கள் பேசினால் நான் விளையாட சம்மதிப்பேன்”

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் தோல்வியை சந்தித்ததோடு புள்ளி பட்டியலிலும் பின்னடைவை சந்தித்த சி.எஸ்.கே – எத்தனையாவது இடம்?

“இல்லையென்றால் இல்லை. ஒருமுறை ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் என்னை வர்ணனையாளராக அழைத்தனர். அதற்கான பணம் உங்களால் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் சொன்னேன். அதற்கு எவ்வளவு என்று கேட்டார்கள். அப்போது ஒரு நாளுக்கு 10,000 யூரோ என்று சொன்னேன். கடைசியில் ஆம் நீங்கள் சொல்வது போல் எங்களால் அதை கொடுக்க முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.

Advertisement