இந்திய அணியின் நிர்வாகத்தில் சேவாக்கிற்கு கிடைக்கப்போகும் மாபெரும் பதவி – குவியும் ஆதரவு

Sehwag
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது. அடுத்ததாக இந்திய அணி ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்படி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் என மிகப் பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND vs WI T20I

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படி இந்திய அணியில் மாற்றம் நிகழ்த்தப்பட இருக்கும் இவ்வேளையில் இந்திய அணியின் தேர்வு குழுவிலும் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த சேத்தன் சர்மா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிசிசிஐ-யால் நீக்கப்பட்டதால் தற்போது தற்காலிக தேர்வுக்குழு தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட்டு வருகிறார்.

Virender Sehwag

ஆனால் அவர் விரைவில் அந்த பதவியில் இருந்து விலகுவார் என்றும் புதிய தலைமை தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ திட்டம் வகுத்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் தேர்வுக்குழு தலைவராக ஒருவரையும் அவரின் கீழ் 5 உறுப்பினர்களையும் கொண்ட குழுவை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது.

- Advertisement -

மேலும் இந்த தேர்வுக்குழு தலைவரானவர் வடக்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ விரும்புகிறது. மேலும் இந்த புதிய தேர்வுக்குழு தலைவருக்கான போட்டியில் விரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், நெஹ்ரா, யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : வீடியோ : மகிழ்ச்சியை வெறித்தனமாக கொண்டாடிய போது – பரிதாபமான காயத்தை சந்தித்த 4 வீரர்கள்

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவாக்கிற்கு அதிக ஆதரவு உள்ளதால் அவரே புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement