சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் இரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் கோலி கூறியதாவது : நான் பல ஆண்டுகளாக பெங்களூரு ராயல் சாலன்சர்ஸ் அணிக்கு விளையாடி வருகிறேன். உண்மையில் நான் பெங்களூரு அணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. எனது கிரிக்கெட் வாழ்வில் பல முக்கிய அனுபவங்களை பெங்களூரு அணி எனக்கு தந்துள்ளது.
மேலும், இந்த பெங்களூரு அணியை தவிர வேறு எந்த அணிக்காகவும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடமாட்டேன். மேலும், பெங்களூரு அணியை விட்டு விலகவும் மாட்டேன் என்று விராட் கோலி கூறினார்.பலமுறை இறுதி போட்டிக்கு சென்றபோதும் அதிர்ஷ்டமின்றி கோப்பையை கைப்பற்ற தவறியது கோலி தலைமையிலான பெங்களூரு அணி.
‘To me it has been a most special experience’@RCBTweets fans, @imVkohli is committed https://t.co/DPumzFk5Gg pic.twitter.com/f6jrqwpfuC
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 16, 2019
பெங்களூரு மற்றும் சென்னை மோதும் போட்டி வரும் 23ஆம் தேதி நடைபெறஉள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று 11 மணி அளவில் துவங்கி 12 மணிவரை நடந்தது மேலும் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது ஒரே கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடந்ததால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது மேலும் தள்ளு முள்ளுடன் டிக்கெட் விற்பனை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.