ரோஹித்துக்கு காயம் அது ஓகே. ஆனா கோலி ஏன் இலங்கை தொடரில் ஆடல தெரியுமா? – வெளியான தகவல்

Rohit-and-Kohli
- Advertisement -

அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது, டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக்கொண்டது

இந்த தொடருக்கு பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்து இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான 2 இந்திய அணிகளையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ நேற்று இரவு தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை என்றாலும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அதேபோன்று விராட் கோலியும் இந்த டி20 தொடரில் பங்கேற்காமல் ஒருநாள் தொடருக்கான அணியில் இணைகிறார். ஆனால் விராட் கோலி ஏன் டி20 தொடரில் விளையாடவில்லை என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அதுகுறித்து வெளியான தகவலில் : இந்த இலங்கை தொடருக்கான டி20 தொடரில் இருந்து விராட் கோலியே தாமாக முன்வந்து ஓய்வு கேட்டு அணியில் இருந்து வெளியுள்ளாராம். மேலும் சிறிது காலத்திற்கு அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட விரும்புகிறேன் என்று விருப்பம் தெரிவித்து டி20 போட்டிகளில் இன்னும் சிறிது காலம் தற்காலிகமாக தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் பி.சி.சி.ஐ-யிடம் கேட்டு கொண்டுள்ளாராம்.

இதையும் படிங்க : சுயநலம் பார்க்காமல் தனது அணிக்காக அதிரடியாக செயல்பட்டு காப்பாற்றிய சூரியகுமார் யாதவ் – ரஞ்சி போட்டி சுவாரசியம்

அதனாலே விராட் கோலியை பி.சி.சி.ஐ டி20 தொடருக்கு தேர்வு செய்யவில்லை. அதேபோன்று இனிவரும் முக்கியமான டி20 தொடர்களில் மட்டுமே கோலி விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் விலகியுள்ள விராட் கோலி புத்தாண்டை கொண்டாட தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வெளிநாட்டிற்கு பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement