Virat Kohli : எல்லா நாட்களும் லக் இல்லாமல் போய்விடாது. வெற்றிக்கு காரணம் இதுவே – கோலி பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 28 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமை

Kohli
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 28 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

பிறகு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரது அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் கோலி 67 ரன்களும் மற்றும் டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை அடைய வைத்தார். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Devilliers

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : வெற்றிக்கு பிறகு பேசவுள்ள இந்த பேட்டியையே எதிர்பார்த்தேன். கடந்த 2 போட்டிகளாக அதிர்ஷ்டம் இல்லாமல் வெற்றிக்கு அருகில் இருந்தும் தோற்றோம். இந்த போட்டியில் 190 ரன்கள் வரை பஞ்சாப் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், 173 ரன்களிலே சுருட்டி விட்டோம்.

Gayle

மிடில் ஓவர்களில் எங்களது அணி சிறப்பாக பந்துவீசி 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 60 ரன்களை மட்டுமே கொடுத்தது. கெயில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவருக்கு எதிராகவும் எங்களது பந்துவீச்சாளர்கள் அதிகமான டாட் பால்களை வீசினார்கள் என்று கோலி கூறினார். மேலும் பின்வரும் போட்டிகளிலும் எங்களது வெற்றி தொடரும் என்றும் தெரிவித்தார்.

Advertisement