Virat Kohli : நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடாமல் இருந்தது நல்லதுதான் – கோலி பேட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

Kohli
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

india

இதன் காரணமாக மூன்று போட்டிகளில் வென்ற நியூசிலாந்து அணி புள்ளிகளுடன் முதலிடத்திலும் இரண்டு வெற்றி மற்றும் இந்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று போட்டி நடைபெறாதது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : நேற்றைய போட்டி நடக்காமல் இருந்தது ஒரு விதத்தில் எங்கள் அணிக்கு நல்லதுதான். மேலும் போட்டி நடைபெறாமல் போனது எங்களுக்கு வருத்தத்தையும் தரவில்லை ஏனெனில் நேற்று மைதானம் இருந்த நிலையில் நாங்கள் விளையாடி இருந்தால் அது பாதுகாப்பற்றதாக இருந்திருக்கும்.

india

நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் நாங்கள் காயமடைய விரும்பவில்லை. மேலும் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை இந்த தொடரில் விளையாட நினைக்கிறோம் அதனால் இந்தப் போட்டி கைநழுவி விட்டது என்ற கவலை இல்லை. நாங்கள் புள்ளி பட்டியல் எந்த இடத்தில் இருந்தாலும் இரண்டு போட்டியில் வென்று இருப்பது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்று கோலி கூறினார்.

Advertisement