15 வருஷமா நான் ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே விளையாட இதுமட்டும்தான் காரணம் – மனம்திறந்த கோலி

Kohli
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் எத்தனையோ ஜாம்பவான் வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் காலத்தின் கட்டாயத்தினாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாகவும் எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் சரி ஒரே அணிக்காக இதுவரை தொடர்ந்து விளையாட முடிவதில்லை. ஆனால் ஐபிஎல் ஆரம்பித்த 2008-ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக அறிமுகமாகிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2022-ஆம் ஆண்டு அதாவது நடப்பு தொடர் வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடி வருகிறார்.

kohli 3

- Advertisement -

அதிலும் எட்டு ஆண்டுகளாக கேப்டனாக விளையாடிய கோலி இந்த ஆண்டு ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக பெங்களூரு அணியில் நீடித்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 217 போட்டிகளில் விளையாடி 6469 ரன்களை குவித்துள்ளார்.

இருப்பினும் இன்றளவும் கோலிக்கும், ஆர்.சி.பி அணிக்கும் இடையேயான பிணைப்பு சற்று கூட தளரவில்லை. அந்த அளவிற்கு ஆர்சிபி அணி கோலிக்கு ஆதரவாகவும், விராட் கோலி ஆர்சிபி அணிக்கு விசுவாசமாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக தான் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாட என்ன காரணம் என்பது குறித்து விராட் கோலி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Kohli

ஐபிஎல் தொடரில் பல அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து ஏலத்திற்கு வருமாறு கூறினார்கள். மேலும் ஆர்சிபி அணியை தவிர்த்து வேறு அணிக்கு மாறுமாறு கேட்டுக்கொண்டார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கும் அந்த எண்ணம் தோன்றியது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக நான் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறேன்.

- Advertisement -

அவர்கள் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் காரணமாகவே நான் ஆர்.சி.பி அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னை நம்பி எனக்கு தொடர்ச்சியாக ஆதரவுகளை வழங்கி வாய்ப்பினை தந்து வரும் பெங்களூரு அணியை விட்டு என்னால் விலகிச் முடியவில்லை. அதேபோன்று ரசிகர்களும் என்னை மிக உச்சத்தில் வைத்து பார்ப்பதால் என்னால் பெங்களூரு அணியை விட நீங்க மனம் விரும்பவில்லை.

இதையும் படிங்க : ஜடேஜாவையும், மொயின் அலியையும் பாத்து தான் நான் அந்த விஷயத்தை பண்ணேன் – மேக்ஸ்வெல் ஓபன்டாக்

நான் விளையாடும் வரை நிச்சயம் ஆர்.சி.பி அணிக்காக மட்டும் தான் விளையாடுவேன். எத்தனையோ வீரர்கள் ஐ.பி.எல் சாம்பியன்களாக இருக்கலாம். ஆனால் நான் பட்டம் வெல்லும் வரை இந்த அணிக்காக மட்டும்தான் விளையாடுவேன் என விராட் கோலி தெளிவான பதிலை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement