RCB vs CSK : கோலியை விட்டுடுங்க. தோனியிடம் வித்தியாசமான முறையில் வேண்டுகோள் வைத்த சிறுமி – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

- Advertisement -

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணியை சேர்ந்த ஒரு சிறுமி சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு வித்தியாசமான முறையில் தனது வேண்டுகோளை விடுத்துள்ளார். அவரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அணியின் தீவிர ரசிகையான அந்த சிறுமி கையில் ஒரு பதாகையுடன் மைதானத்தில் சோகமாக இருந்தார். இதோ அந்த புகைப்படம் :

Kohli

- Advertisement -

அந்த பதாகையில் தோனி ப்ளீஸ் விராட் கோலியை விட்டுவிடுங்கள் அவர் ஜெயிக்கட்டும் என்று எழுதி அந்த சிறுமி சோகத்துடன் போட்டியை பார்த்து கொண்டிருந்தார். இதனை மைதான கேமராமேன் படம் பிடிக்க அந்த சிறுமியின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

VK and MS

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Raina

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Advertisement