ரொனால்டோ, மெஸி மாதிரி.. ஐபிஎல் கோப்பை ஜெயிக்கனும்ன்னா கோலி இதை செஞ்சாகனும்.. பீட்டர்சன் வெளிப்படை

Kevin Pieterson 3
- Advertisement -

விறுவிறுப்பாக கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியது. இந்த வருடம் ஆரம்பத்திலேயே தொடர்ந்து 6 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி ஒரு மாதமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்தது. ஆனால் கடைசி 6 போட்டிகளில் அற்புதமாக விளையாடிய அந்த அணி 6 வெற்றிகளை பதிவு செய்தது.

குறிப்பாக வாழ்வா – சாவா போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னையை தோற்கடித்து வெளியேற்றிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனால் மகளிரணியை போல இந்த வருடம் ஆடவர் அணியும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மே 22ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பீட்டர்சன் கோரிக்கை:
அதனால் 2008 முதல் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு பரிதாபமாக வெளியேறியது. அதே காரணத்தால் விராட் கோலியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் சுக்கு நூறாக உடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணிக்காக மொத்தம் 8000 அடித்துள்ள அவர் இந்த வருடம் 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கி வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் வழக்கம் போல முக்கிய போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை கோட்டை விட்ட விராட் கோலி சோகத்துடன் வெளியேறினார். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற கால்பந்து ஜாம்பவான்கள் போல ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி விராட் கோலி வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏற்கனவே சொன்னதை இப்போதும் நான் மீண்டும் சொல்கிறேன். மற்ற விளையாட்டுகளின் மகத்தானவர்கள் சில அணிகளை விட்டு வெளியேறி மற்ற அணிகளில் வெற்றிகளை கண்டுள்ளனர். அதே போல கடுமையாக முயற்சித்த விராட் கோலி மீண்டும் ஆரஞ்சு தொப்பியை வென்றும் அவருடைய அணி தோல்வியை சந்தித்தது”

இதையும் படிங்க: கோப்பையை ஜெயிக்கலன்னாலும் அந்த சம்பவத்தை காலத்திற்கும் மறக்க முடியாது.. அவங்களுக்கு நன்றி.. கோலி உருக்கம்

“ஆர்சிபி அணிக்கு அவர் மதிப்பை கொண்டு வருகிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் விராட் கோலி கோப்பைக்கு தகுதியானவர். எனவே கோப்பையை வெல்ல பெற உதவும் அணிக்காக அவர் விளையாடத் தகுதியானவர். உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும். பேக்கேம், ரொனால்டோ, மெஸ்ஸி, ஹரி கேன் ஆகியோர் தங்களுடைய அணிகளை விட்டுச் சென்று வேறு அணியில் வெற்றி கண்டனர்” என்று கூறினார்.

Advertisement