IND vs ENG : 3 ஆவது போட்டியில் வெற்றி பெற்றாலும் ஏமாற்றத்தை பரிசாக அளித்த விராட் கோலி – ரசிகர்கள் கவலை

Virat-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் சமநிலை வகித்தது.

Yuzvendra Chahal

- Advertisement -

அதன் காரணமாக கடைசி மூன்றாவது ஒருநாள் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் வந்து வீசியது. அதன்படி இந்த போட்டியிலும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களை கூட விளையாட முடியாமல் 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 60 ரன்களும், மொயின் அலி 34 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து 260 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரினையும் (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

Kohli

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 125 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிஷக்காமல் இருந்தார். அதே வேளையில் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்து அசத்தினார். இப்படி இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி இந்த போட்டியில் பிரமாண்டமான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான பேட்டிங் பார்மில் இருந்து வரும் விராட் கோலி இந்த தொடரிலாவது சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சொதப்பியிருந்த விராட் கோலி இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 22 பந்துகளை சந்தித்து 17 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறியது ரசிகர் மத்தில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இதையும் படிங்க : IND vs ENG : 3 ஆவது ஒருநாள் போட்டியில் தனது பெஸ்டை பதிவு செய்த ஹார்டிக் பாண்டியா – சூப்பர் தாங்க அவரு

ஏனெனில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போதே அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஒருநாள் தொடரிலும் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பையும் வீணடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய கவலையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement