விராட் கோலியின் வருகையால் 2 ஆவது டி20 போட்டியில் வாய்ப்பை இழக்கப்போகும் வீரர் – யார் தெரியுமா?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

இதன் காரணமாக இந்த தொடரில் தற்போது இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்வேளையில் முதல் போட்டியின் போது தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து வெளியேறிய விராட் கோலி எஞ்சியுள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே இதுபற்றி பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விராட் கோலி முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருக்கிறார் என்றும் எஞ்சியுள்ள கடைசி 2 போட்டிகளிலும் விராட் கோலி விளையாடுவார் என்று அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் விராட் கோலி அணிக்குள் வருவதால் எந்த வீரர் அணியிலிருந்து வெளியேறப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடிய துவக்க வீரர்களாக விளையாடிய ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் இரண்டாவது போட்டியிலும் துவக்க வீரர்களாக தொடர்வார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

ஒருவேளை காயத்தில் இருந்து ஜெய்ஸ்வால் குணமடைந்தால் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக சுப்மன் கில்லுக்கு பதிலாக அணிக்குள் வருவார் என்றும் மூன்றாவது இடத்தில் விராட் கோலி களம் இறங்குவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : குல்தீப், சஹாலை விட 2024 டி20 உ.கோ ஜெயிக்க நமக்கு அவர் தான் ஸ்பின்னரா வேணும்.. கவாஸ்கர் தேர்வு

அதேவேளையில் முதல் போட்டியில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக விராட் கோலி அணிக்குள் வருவார் வருவார் என்றும் தெரிகிறது. மேலும் இந்த ஒருசில மாற்றங்களை தவிர்த்து பெரியளவில் இந்திய அணியில் வேறுயெந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement