பெரிய ஈகோவை கொண்டுள்ள அந்த இந்திய வீரரை அவுட்டாக்கி அடக்க ரெடி.. எச்சரித்த இங்கிலாந்து வீரர்

Ollie Robinson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடரில் எப்படியாவது இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் தங்களுடைய புதிய அணுகுமுறையை சுழலுக்கு சாதகமான இந்தியாவிலும் பயன்படுத்தி இம்முறை வரலாற்றை மாற்றும் முறைப்புடன் இங்கிலாந்து களமிறங்கியுள்ளது. மறுபுறம் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களின் சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோற்காமல் இருக்கும் இந்தியா இம்முறையும் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய ஸ்பின்னர்களை வைத்து இங்கிலாந்தை சிதறடிக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஈகோ பிளேயர்:
இந்நிலையில் தன்னுடைய சொந்த மண்ணில் யாரும் எதுவும் செய்ய முடியாது எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து வீரர் ஓலி ராபின்சன் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஈகோவை அடக்கி அவுட்டாக்கி இந்த தொடரில் விராட் கோலிக்கு சவால் கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள் அல்லவா? மேலும் நீங்கள் எப்போதுமே சிறந்த வீரர்களை அவுட் செய்ய விரும்புவீர்கள். விராட் கோலி அது போன்ற ஒரு வீரர். அவர் மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் எதிரணி பவுலர்களை நம்முடைய சொந்த மண்ணில் அதிரடியாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிக்கலாம் என்று அவர் நினைப்பார்”

- Advertisement -

“இதற்கு முந்தைய தொடர்களிலும் நாங்கள் மோதியுள்ளோம். எனவே இம்முறையும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த சில வருடங்களில் எங்களுடைய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு நான் தலைவராக இருப்பேன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல் பயிற்சிகளை செய்து வருகிறேன். தற்போது நல்ல முதிர்ச்சியடைந்துள்ள நான் இத்தொடரை மற்றுமொரு சாதாரண தொடராக நினைத்து பயிற்சி எடுக்கிறேன்”

இதையும் படிங்க: லெஃப்ட் ஹேண்ட் தோனி மாதிரி விளையாடும் அவர்.. நல்லா வருவாரு.. இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

“தற்போதைக்கு எங்களுடைய பவுலிங் கூட்டணியின் தலைவராக நான் என்னை நினைக்கவில்லை. மாறாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்பின்னர்கள் மற்றும் அணிக்கு சிறப்பாக விளையாடி ஆதரவு கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார். இருப்பினும் வரலாற்றில் மிட்சேல் ஜான்சன் போன்ற பவுலர்களே தெறிக்க விட்ட விராட் கோலி இவரையும் இந்த தொடரில் சிறப்பாக எதிர்கொள்வார் என்று ரசிகர்கள் நம்பலாம்.

Advertisement