இன்னும் 6 ரன்கள் மட்டுமே தேவை. சச்சினுக்கு அடுத்து இந்த சாதனையை செய்யப்போறது – விராட் கோலிதான்

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இது தொடரில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதல் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

INDvsWI

- Advertisement -

ஏற்கனவே தென்னாப்பிரிக்க மண்ணில் தோல்வியை தழுவிய இந்திய அணியானது தற்போது மீண்டும் வெற்றியுடன் துவங்க இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் முதல் முறையாக ரோகித் சர்மாவின் தலைமையில் விராட் கோலி பங்கேற்க காத்திருக்கிறார்.

இந்த போட்டியில் விராத் கோலி மேலும் 6 ரன்களை அடிப்பதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்த மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார். அதன்படி இந்திய அணி விளையாடும் இந்த 1000 ஆவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி இன்னும் 6 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 5000 ரன்களைக் குவித்த 2-ஆவது வீரராக மாறுவார்.

Kohli

ஏற்கனவே இந்திய மண்ணில் சச்சின் டெண்டுல்கர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அவரை அடுத்து இந்திய மண்ணில் 5000 ரன்களை அடிக்கும் இரண்டாவது வீரராக விராட் கோலி சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜடேஜாவும் இல்ல. யாரும் இல்ல நீங்க பயப்படவே வேணாம் – தல தோனி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன நிர்வாகம்

ஏற்கனவே சச்சினின் பல சாதனைகளை முறியடித்து இருக்கும் விராட் கோலி தற்போது சச்சினுக்கு அடுத்ததாக இந்திய மண்ணில் 5000 ரன்களை அடிக்கும் இரண்டாவது வீரராக சாதனையை படைக்க விராட் கோலி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement